61. நீலகண்டர் கோயில்
இறைவன் நீலகண்டர்
இறைவி விசாலாட்சியம்மை
தீர்த்தம் விசாலாட்சி தீர்த்தம்
தல விருட்சம் கல் வாழை
பதிகம் திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர்
தல இருப்பிடம் திருப்பைஞ்ஞீலி, தமிழ்நாடு
வழிகாட்டி திருச்சியை அடுத்துள்ள மணச்சநல்லூரிலிருந்து 2.5 கி.மீ. தொலைவில் உள்ளது. பிச்சாண்டவர் கோயிலிலிருந்து நொச்சியம் வழியாகவும் இத்தலத்தை அடையலாம்.
தலச்சிறப்பு

Tirupainjeeli Gopuramவாழை மரங்கள் நிறைந்த தலமாக இருந்ததால் 'பைஞ்ஞீலி' என்று அழைக்கப்படுகிறது. இது ஒரு வகை வாழை. இத்தலத்து மூலவர் 'நீலகண்டர்' என்றும் அம்பிகை 'விசாலாட்சியம்மை' என்றும் வணங்கப்படுகின்றனர்.

இத்தலத்தில் கல் வாழை மரம் ஒன்று உள்ளது. திருமணத் தடை உள்ள ஆண், பெண் இருபாலரும் இத்தலத்திற்கு வந்து இந்த கல்வாழைக்கு பூசை செய்தால் தடை நீங்கும்.

Tirupainjeeli Moolavarதிருநாவுக்கரசர் இத்தலத்திற்கு வருகை தந்தபோது அவருக்கு பசியெடுக்க, இறைவன் பந்தல் அமைத்து கட்டமுது கொடுத்த தலம். இந்நிகழவு சித்திரை மாதத்தில் உற்சவமாக நடைபெறுகிறது.

திருஞானசம்பந்தர் ஒரு பதிகமும், திருநாவுக்கரசர் ஒரு பதிகமும், சுந்தரர் ஒரு பதிகமும் பாடியுள்ளனர். இக்கோயில் காலை 6 மணி முதல் மதியம் 12.30 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் திறந்திருக்கும்.

Back

   
 
© 2006 www.templeyatra.com - All Rights Reserved.
Designed by www.templeyatra.com